சட்டசபையில் நடந்த நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசும் பங்கேற்றார்.