ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தீபா தனது அரசியல் பிரவேசத்தை தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று தனது புதிய இயக்கத்தை 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' என்று அறிவித்தார். இன்று முதல் எனது அரசியல் பிரவேசம் ஆரம்பமாகிறது என்றார். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக பணியை தொடர்வேன் என்றும் தனக்கு ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்து, இரட்டை இலையை மீட்போம் என்றார்.