சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான டாக்டர் எம்.ஜி.ஆரின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.