இந்தியாவின் 14வது குடியரசு தலைவருக்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார், அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவ்வகையில், இன்று சென்னை வந்த அவர், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.