பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே ஆகியோர் ராஜ் காடில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து பேசுவார். அதன்பின்னர் மும்பைக்கு சென்று 2008ல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றனர்.