மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியதில் ஒரு லேப்டாப், இரண்டு பென்ட்ரைவும், ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஆவணங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.