முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலையடுத்து இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி முடக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. இனி அதிமுக என்கிற பெயரை அந்த அணியினரே பயன்படுத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.