நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் தில்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். பூஜை நடத்திய பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத்துறை அமைச்சராக, அருண் ஜெட்லி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இந்திராகாந்தி நாட்டின் பிரதமராக பதவி வகித்தபோது பாதுகாப்புத்துறையை கூடுதலாக கவனித்து வந்தார். பாதுகாப்புத்துறைக்கென தனி அமைச்சராக பதவியேற்கும் முதல் பெண் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் என்பதும் குறிப்பிடத்தக்கது.