காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் திராவிடர் கழக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டம் செய்த ஸ்டாலின், கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.