நடிகர் கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தை தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கி, தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்ட மைதானத்தில் தனது கட்சி கொடியை ஏற்றிய கமல்ஹாசன், தனது கட்சியின் பெயர் "மக்கள் நீதி மையம்" என அறிவித்தார். பொதுக்கூட்ட மேடையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி மற்றும் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.