உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு, சிங்கப்பூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு உலக அரங்கில், அனைத்து மட்டத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.