உடல் நலக்குறைவால் குலோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது உடலுக்கு திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடக் கழகம் தலைவர் கி. வீரமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகன்னு, தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.