மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா, சிறப்பாக நடைபெற்றது. இதற்கு முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மேலும் அவர்களுடன் அமைச்சகள் கடம்பூர் ராஜூ, காமராஜ், செங்கோட்டையன், வேலுமணி, சண்முகம், செல்லூர் ராஜு, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.