கொங்கேழு தலங்களுள் மூவரால் பாடப்பெற்ற கொடுமுடி ஸ்ரீமகுடேஸ்வரர் திருக்கோயிலில் செப்டம்பர் 7-ம் தேதி, கணபதி ஹோமத்துடன் அபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. யாகசாலையில் 1008 கலசங்கள் ஸ்தாபனம் செய்து நான்குகால யாகசாலை வழிபாடுகள் செய்யப்பட்டன. வேத சிவாகம, திருமுறைப் பாராயணங்கள் செய்விக்கப்பட்டு, மறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் சகஸ்ரகலசாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சிதம்பர் தேவாரப் பாடசாலை மாணவர்களின் திருமுறைப் பாராயணத்துடன் ஆவணி மூலத் திருவீதி உலா நடந்தேறியது. புகைப்படங்கள்: கொடுமுடி வசந்தகுமார்.