கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லெஜெண்ட் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 45 பிறந்தநாளை இன்று கொண்டாடினார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அரசின் அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகளை பெற்றுள்ளார். மேலும் இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற ஒரே விளையாட்டு வீரர் சச்சின்தான்.