ஆயுதமின்றி நாஜீயத்தை எதிர்த்துப் போராடுங்கள்

ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனுக்கும் வேண்டுகோள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்துள்ளார்:
ஆயுதமின்றி நாஜீயத்தை எதிர்த்துப் போராடுங்கள்

ஒவ்வொரு பிரிட்டிஷ்காரனுக்கும் வேண்டுகோள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்துள்ளார்:
கண்ணியமற்ற வகையில் நாஜீகளுடன் போட்டி போட நீங்கள் விரும்பவில்லையென்றே நான் நம்புகிறேன். இதற்கு இன்னம் பெருந்தன்மையான, இன்னம் தீரம் வாய்ந்த வழியை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இந்த வழி மிகவும் வீரம் வாய்ந்த சோல்ஜருக்கு உகந்த வழியே.
நாஜீகளுடன் நீங்கள் ஆயுதமின்றி போராட வேண்டுமென விரும்புகிறேன். ராணுவ பாஷையில் கூற வேண்டுமானால், நாஜீயத்தை நீங்கள் அஹிம்சா தர்ம ஆயுதத்தால் போராட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது நீங்கள் மேற்கொண்டிருக்கும் ஆயுதம், மனுஷ்ய சமூகத்தினரைக் காப்பாற்ற பிரயோஜனமற்றது. 
உங்கள் வசமிருப்பதாக நீங்கள் கூறும் தேசங்களிலிருந்து அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை எடுத்துக் கொள்ளுமாறு நீங்கள் ஹிட்லரையும், முúஸாலினியையும் அழைக்க வேண்டும். உங்களது வனப்பு மிகுந்த தீவை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் உங்கள் ஆத்மாவையும் மனதையும் நீங்கள் கொடுக்க முடியாது.
இந்த கனவான்கள் ஜெர்மன், இத்தாலிய நாஜிகளும் பாஸிஸ்டுகளும், உங்கள் வீடுகளில் வசிக்க விரும்பினால் நீங்கள் காலி செய்து வீடுகளை அளிக்க வேண்டும். வெளியே போக நடமாட உங்களுக்கு இவர்கள் சுதந்திரம் கொடுக்காவிடில் ஆண், பெண், குழந்தைகள் உள்பட சகலரும் பலியாகவும் நீங்கள் இணங்கவேண்டும். அவர்களிடம் விஸ்வாசமாக இருக்க நீங்கள் கண்டிப்பாக மறுத்து விடவேண்டும். இந்த வழி அல்லது முறையைத்தான் நான் அஹிம்ஸா தர்ம ஒத்துழையாமை என்று கூறி வருகிறேன்

தினமணி (03-07-1940)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com