பைத்தியக்கார ஹிட்லரின் கொடுங்கோன்மை

"ஜெர்மனியில் யூதர்களுக்கு இப்பொழுது இழைக்கப்படும் கஷ்டங்களைப்போல், சரித்திரத்தில் வேறெந்த உதாரணமுமில்லையென்றே தோன்றுகிறது.
பைத்தியக்கார ஹிட்லரின் கொடுங்கோன்மை

மகாத்மா காந்தி எழுதியிருக்கும் வியாசத்தின் விவரம் பின்வருமாறு:
 "ஜெர்மனியில் யூதர்களுக்கு இப்பொழுது இழைக்கப்படும் கஷ்டங்களைப்போல், சரித்திரத்தில் வேறெந்த உதாரணமுமில்லையென்றே தோன்றுகிறது.
 பழைய காலத்துக் கொடுங்கோலர்களுக்கு, இப்போது ஹிட்லருக்குப் பிடித்திருப்பதைப்போல் அவ்வளவு பைத்தியம் பிடித்ததில்லை. இதை ஹிட்லர் ஒரு மதச் சடங்கைப் போல் உற்சாகத்துடன் செய்கிறார்.
 பிரத்தியேகமான தீவிர, தேசீய மதம் ஒன்றை ஹிட்லர் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். அதன்படி, கொடுமைகள் எல்லாம், என்றென்றும் புகழ்ச்சிக்குரிய மனித வர்க்கத்தின் நன்மைக்கான காரியங்களாய் விடுகின்றன.
 ஏமாற்றுதல், பலஹீனம் முதலியவைகளை மறைப்பதற்கு ஜீவகாருண்யம் என்பது ஒரு போர்வையாக உபயோகிக்கப்படுகிறதல்லவா? அம்மாதிரி தடைகள் ஒன்றுமில்லாமலிருந்தால், பலாத்காரத்தை எவ்வளவு திறமையுடன் தூண்டிவிட முடியுமென்பதை, ஜெர்மனி உலகத்துக்கு எடுத்துக் காட்டுகிறது.
 நான் ஒரு யூதனாயிருந்தால், ஜெர்மனியில் பிறந்தவனாயிருந்தால், என்னுடைய ஜீவனத்துக்கு நான் ஜெர்மனியில் சம்பாதிப்பவனாயிருந்தால் மற்றெந்த உயர்ந்த ஜெர்மனியனையும்போல், நானும் என்னுடைய நாடு ஜெர்மனி தான் என்று உரிமை கொண்டாடுவேன். வெளியேற்றப்படுவதற்கோ, வித்யாசமாக நடத்தப்படுவதற்கோ சம்மதிக்க மாட்டேன்.
 இதற்காக மற்ற யூதர்களும், என்னுடன் சேரவேண்டுமென்று காத்துக் கொண்டிருக்க மாட்டேன். கடைசியில் யாவரும் என்னுடைய உதாரணத்தைப் பின்பற்றித் தானாகவேண்டுமென்ற நம்பிக்கையுடன் இறங்கி விடுவேன்.
 ஒரு யூதனோ அல்லது எல்லா யூதர்களுமோ இந்தப் பரிகாரத்தை ஏற்றுக்கொள்வதாயிருந்தால், இதனால் அவர்களுடைய நிலைமை இப்போதிருப்பதை விடக் கேவலமாக இருக்கப் போவதில்லை.''


தினமணி (26-11-1938)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com