இதயத்தின் எதிரிகள் யார் தெரியுமா?

இதய நோய் தீவிரமாவதற்கு பல ஆபத்தான காரணிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் மோசமான உணவுப் பழக்கவழக்கம், குறைவான உடல் செயல்பாடு, அதிக ரத்த அழுத்தம்,
இதயத்தின் எதிரிகள் யார் தெரியுமா?

இதய நோய் தீவிரமாவதற்கு பல ஆபத்தான காரணிகள் உள்ளன. ஆனால் பெரும்பாலானோர் மோசமான உணவுப் பழக்கவழக்கம், குறைவான உடல் செயல்பாடு, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிகமான கொழுப்புச் சத்து, புகைப்பழக்கம் ஆகியவை மூலம் இதய நோயினை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
நீங்களே இடர்ப்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வது இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகப்படுத்தும்.
ரத்த நாளங்கள் சுருங்குவது-தடிப்பது, ரத்த நாளங்களில் அதிக கொழுப்பு, இதர கொழுப்புச் சத்துகள் சேருவதால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. இந்தச் சேர்மானங்களே ரத்த உறைகட்டி எனப்படும். இந்த ரத்த உறைகட்டியில் ஏற்படும் முறிவானது பக்கவாதம், இதய அடைப்புக்கு இட்டுச் செல்லும்.
உயர் ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்பு என்ன?
ரத்த நாளங்களில் பயணம் செய்யும் ரத்தமானது, இந்த நாளங்களின் சுவர்களை அழுத்திச் செல்கின்றன. இந்த அழுத்தமே ரத்த அழுத்தமாகக் கணக்கிடப்படுகிறது. பக்கவாதம், மாரடைப்பு நோய், இதயம் செயலிழத்தல் ஆகியவற்றுக்கு முக்கியமான காரணம் உயர் ரத்த அழுத்த நோய் ஆகும்.
பெண்களுக்கு உரிய இயக்கு நீர் (ங்ள்ற்ழ்ர்ஞ்ங்ய்) காரணமாக இதய நோயிலிருந்து பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்களா?
பெண்களுக்கு உரிய இயக்கு நீர் காரணமாக, உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதம் (ஏஈக ஸ்ரீட்ர்ப்ங்ள்ற்ங்ழ்ர்ப்) உடலில் அதிகரித்து, பெண்களைப் பாதுகாக்கிறது. இருப்பினும் மாதவிடாய் நின்ற பிறகு, பாதுகாப்பு விலகி ஆண்களைப் போன்று பெண்களுக்கும் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு சமமாகிறது.
எனினும் சர்க்கரை நோய், ட்ரைகிளிசரைட்ஸ் எனப்படும் கொழுப்பு அமிலங்களால் உருவான அமிலக்கூட்டு அதிகமாக உள்ள பெண்கள் தங்களுக்கு உரிய இயக்கு நீரின் பாதுகாப்பு சாத்தியக்கூறினை இழக்கின்றனர்.
புகைப்பதும், இதய நோயும் எவ்வாறு தொடர்புடையது?
புகை பிடிப்பதினால் அதிலுள்ள நிகோட்டின் ரத்த நாளங்களின் வரிக்கூறினைப் பாதிக்கிறது. அதில் கொழுப்புப் படிமங்களை அதிகரித்து, ரத்த உறைவினை அதிகரிக்கிறது, கொழுப்பு அமிலத்தின் தன்மைக்கு மாறாகச் செயல்பட்டு பாதிப்படைச் செய்கிறது. இது மட்டுமல்லாமல் ரத்த நாளங்களின் அளவினைச் சுருக்குகிறது.
மாரடைப்பின் அடையாளங்கள், அறிகுறிகள் எவை?
மாரடைப்பின் அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் (நெஞ்செரிச்சல், அழுத்தம் அல்லது இறுக்கம்), கழுத்து, தாடை, தோள் அல்லது முதுகில் அசௌகரியம், மூச்சுத் திணறல், குமட்டல், அதிக வியர்வை, குளிர்ந்த சருமம். இவற்றில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை அவசியம்.
இதய நோய் இடர்ப்பாடுகளைக் குறைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இதய நோயின் இடர்பாடுகளைக் குறைக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. துடிப்பான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான கட்டுப்பாடான உணவுப் பழக்கம், ஆரோக்கியமான உடல் எடை மேம்பாடு, புகைப் பழக்கத்தினைக் கைவிடுதல், மன அழுத்தங்களைக் களைதல் இவையாவும் இதய நோயின் இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
மேலும் முறையான மருத்துவ ஆலோசனையின் மூலம் கொழுப்பு மற்றும் இதர உடல்கூறுகளைச் சோதித்தல், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவை இதய நோயின் இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க வழி செய்யும்.
இதய நோயின் வகைகள்: இதயச் செயல்பாடு பலவீனம், முறையான இதயத் துடிப்பின்மை, ரத்த நாளங்களின் சுருக்கத்தினால் ஏற்படும் இதய நாள பலவீனம் போன்றவை.
இதய பைபாஸ் சிகிச்சை என்றால் என்ன?
இதய ரத்த நாளத்தில் அடைப்புள்ள பகுதியை நீக்கி விட்டு, அதற்குப் பதில் உடலில் உள்ள ஆரோக்கியமான ரத்த நாளத்தினை எடுத்து (பெரும்பாலும் காலில் இருந்து) பொருத்துவதே பைபாஸ் சிகிச்சை ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com