'ஃபிரன்ச் ஃபிரைஸ்', 'பொட்டேட்டோ சிப்ஸ்' என உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வரும் 5 ஆபத்துகள்!

காய்கறியே பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட ‘ஃபிரன்ச் ஃபிரைஸ்’, போடேட்டோ சிப்ஸ்’, ‘ஆலு பராத்தா’ என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வரப்போகும் பக்க விளைவுகளையும்..
'ஃபிரன்ச் ஃபிரைஸ்', 'பொட்டேட்டோ சிப்ஸ்' என உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் வரும் 5 ஆபத்துகள்!

உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களாலும் வெவ்வேறு முறையில் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு உருளைக் கிழங்கு. இவ்வளவு ஏன் காய்கறியே பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட ‘ஃபிரன்ச் ஃபிரைஸ்’, போடேட்டோ சிப்ஸ்’, ‘ஆலு பராத்தா’ என்றால் விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்த உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் உங்களுக்கு வரக்கூடிய முக்கிய 5 பிரச்னைகள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அதற்காக உருளைக் கிழங்கில் ஊட்டச்சத்தே இல்லையா? அதைச் சாப்பிடவே கூடாதா? என்றால் அது தவறு, அளவாகச் சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும், ஆனால் அதையே அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வரப்போகும் பல பக்க விளைவுகளையும் சந்திக்க உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.

1. உடல் எடையை அதிகரிக்கும்:

உடல் எடையைச் சரியாக வைத்திருப்பதே பல நோய்கள் நம்மை நெருங்காமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒரு நல்ல வழி. ஆனால், உருளைக் கிழங்கில் அதிகம் இருக்கும் கார்போஹைட்ரேட் உங்களின் உடல் எடையை மிக வேகமாக இரு மடங்காக்கும். தேவையற்ற கொழுப்புகளை நம் உடலில் தேங்க வைத்து மூட்டு வலி, நீரிழிவு, இதய பிரச்னையென அனைத்தையும் வர வைத்துவிடும்.

2. சேரிமான பிரச்னையை உண்டாக்கும்:

உருளைக் கிழங்கை சரியான அளவு சாப்பிட்டால் அது நம் செரிமானத்தை சீர்ப் படுத்தும் ஒரு நல்ல மருந்தாக இருக்கும், ஆனால் அதே உருளைக் கிழங்கை அதிகம் சாப்பிட்டால் செரிமான குழாய்களில் அடைப்பை ஏற்படுத்திப் பேதி, வயிற்றுக் கோளாறு, அஜ்ஜீரனப் பிரச்னை எனப் பலவற்றை வரச் செய்யும். உருளைக் கிழங்கில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் அது வாயு தொல்லையை உண்டாக்கும்.

3. உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும்:

உருளைக் கிழங்கில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், ஆனால் அதே சமயம் நீங்கள் ஏற்கனவே ரத்த அழுத்தத்தைச் சரி செய்ய மருந்து உட்கொள்கிறீர்கள் என்றால் இந்த போட்டாசியம் அதனுடன் சேர்ந்து ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு மாறாக அதை அதிகப் படுத்தி விடும் அபாயம் உள்ளது.

4. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை அதிகரிக்கும்:

கார்போஹைட்ரேட் சத்து உருளைக் கிழங்கில் அதிகம் இருப்பதால் அது உடலின் குளுக்கோஸ்களை உடைத்து சர்க்கரையை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை  உண்டாக்கும். இதனாலேயே நீரிழிவு நோயாளிகளை மருத்துவர்கள் ஒரு வேளை மட்டும் சாதம் சாப்பிடச் சொல்வார்கள். சாதத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல.

5. புற்றுநோயை வரச் செய்யும்:

நமது உடலுக்கு ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நல்லது தான் என்றாலும், அதை அதிகம் உட்கொள்வது புற்றுநோயை உண்டாக்கும். அதிகமான ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் புற்று நோய் அணுக்களை நமது உடலில் வளரச் செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com