சாலை விபத்தில் காயம்பட்டு, மூளைச்சாவு அடைந்தவரின் 6 உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.
சென்னை கொளத்தூர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(42). இவருக்குத் திருமணம் ஆகவில்லை.
இவர் அண்மையில் ரெட்டேரி சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த வாகனம் அவர் மீது மோதியது.
பலத்த காயம் அடைந்த அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதயைடுத்து, அவரது உறுப்புகளைத் தானம் அளிக்க அவரது உறவினர்கள் முன்வந்தனர்.
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு செல்வராஜின் இருதயம், சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டன. தானம் பெறப்பட்ட உறுப்புகள் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.