அடிக்கடி உணவில் வாழைப் பூவை கூட்டு வைத்து சாப்பிட்டு வர பித்த நோய்கள் அகலும்.
வெங்காயத்தின் பூவை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொண்டால் உடல் சூடு குறையும்.
நித்திய கல்யாணி பூவை கஷாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.
- மலர்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து
செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.
திராட்சை பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல்புண் குணமாகும்.
விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும், மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம், தொண்டை நோய்கள் குணமாகும்.
- பழங்களின் மருத்துவம் என்ற நூலிலிருந்து