இந்தியாவில் கொண்டாடப்படும் பல விழாக்களில் நவராத்திரி மிகவும் பிரசித்திப்பெற்றது. முக்கியமாகப் பெண்கள் இந்த ஒன்பது தினங்களும் வெவ்வேறு ரூபத்திலான அம்மனை விரதம் இருந்து கண்ணும் கருத்துமாய் வழிப்படுவார்கள்.
இதில் கஷ்டம் என்னவோ நீரிழிவு நோயளிக்குதான், பல வருடங்களாக நவராத்திரியின் போது சாப்பிடாமல் விரதம் இருந்ததால் திடீர் என்று வந்த சர்க்கரை நோயால் விரதத்தை நிறுத்துவதற்கு மனசு அனுமதிக்காது, ஆனால் அதையும் மீறி விரதம் இருக்க முடிவு செய்தால் அதற்கு உடல் அனுமதிக்காது. கை நடுக்கம், மயக்கம், நினைவிழத்தல் எனக் கொண்டுபோய் மருத்துவமனையில் படுக்க வைத்துவிடும். இதைப்போன்ற பிரச்னைக்கு தீர்வே இந்தப் பதிவு.
விழாக் காலத்தில் உங்களது மனதையும் கஷ்டப்படுத்தாமல் அதே சமயம் உடலையும் கஷ்டப்படுத்தாமல் எப்படி எச்சரிக்கையுடன் பக்குவமாக விரதம் இருப்பது என்று மருத்துவர் பங்கஜ் அகர்வால் கூறியிருப்பதைப் பார்ப்போம்;