ஜீரண மண்டலத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதற்கான எளிய அறிகுறி தான் விக்கல். இந்த விக்கல் எப்போதெல்லாம் வருகிறது என்று யோசித்துப் பாருங்கள்.
வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் என்றொரு தடுப்புச் சுவர் போன்ற பகுதி உண்டு. இது தான் வயிற்றையும், நுரையீரலையும் தனித்தனியே பிரிக்கிறது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் சரளமாகச் செல்வதற்கு வசதியாக இந்த உதரவிதானம் மேலும், கீழுமாக இயங்கக் கூடியது. இது நமது உடலுக்குள் சாதாரணமாக நடக்கும் ஒரு செயல்பாடு. சிற்சில சமயங்களில் மூச்சு விடும் போது உதரவிதானம் மேலும் கீழுமாக இயங்கும் சமயத்தில் நமது குரல்வளை மூடியிருந்தால் உடனே விக்கல் வந்து விடுகிறது.
விக்கல் வரக் காரணங்கள்...
பொதுவாக சாதாரண விக்கல் என்றால் தொடர்ச்சியாக சிறிது தண்ணீரை மொண்டு விழுங்கினாலே விக்கல் நின்று விடும். ஆனால், என்ன முயன்றும் விக்கல் நின்றபாடில்லை என்றால் நாம் நிச்சயம் மருத்துவரை அணுகித்தான் ஆகவேண்டும்.
தண்ணீர் அருந்தியும் விக்கல் நிற்கவில்லை என்றால்....
விக்கல் வந்த சில நிமிடங்களில் அது நின்று விட்டால் பிரச்னையில்லை. அது சாதாரண விக்கலாகத்தான் இருக்கும். ஆனால், ஒருமுறை விக்கல் வந்து அது 2 மூன்று நாட்கள் வரை நீடித்தால் நிச்சயம் உடலுக்குள் பிரச்னை இருக்கிறது என்று தான் அர்த்தம்.
அது காசநோய், கேன்சர், நுரையீரலில் நெறி கட்டுதல், உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிப்பு என ஏதாவது தீவிரமான ஆரோக்யக் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே விக்கல் ஓரிரு முறைகளுக்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரைக் கலந்தாலோசித்து விடுவதே நல்லது.
விக்கலுக்கு ஒரு எளிய பாட்டி வைத்திய முறை...
விடியோ கேம் அடிக்ஷன், மிக மோசமான ‘மனநலச் சீர்கேட்டு நோய்’ என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
குழந்தைப் பருவ ஒபிஸிட்டிக்கு பால் காரணமில்லை: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!
இது டயாபட்டிஸ் நோயாளிகளுக்கு உதவக் கூடும்! முயற்சி செய்து பாருங்கள்!
டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
செருப்பை கழற்றி விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடல் எடை குறையும், புதிய ஆய்வு முடிவு வெளியீடு!