வாயில் உண்டாகும் துர்நாற்றம், நாக்கு உலர்ந்து போதல், பஞ்சு போன்ற பல் ஈறுகள் குணமாக 

உடம்பில் புளிப்புத்தன்மை அதிகமாக தொடர்ந்து இருக்கும் போது வாயிலிருந்து உண்டாகும் துர்நாற்றம்
வாயில் உண்டாகும் துர்நாற்றம், நாக்கு உலர்ந்து போதல், பஞ்சு போன்ற பல் ஈறுகள் குணமாக 

அறிகுறிகள் : உடம்பில் புளிப்புத்தன்மை அதிகமாக தொடர்ந்து இருக்கும் போது வாயிலிருந்து உண்டாகும் துர்நாற்றம், மேலும் நாக்கு உலர்ந்து போய் தண்ணீர்த் தாகம் அதிகம் எடுத்தல் மற்றும் பல் ஈறுகள் பஞ்சு போன்று மாறுவதற்கு காரணம் இரைப்பையில் உண்டாகும் புளிப்புத் தன்மை. இவற்றிலிருந்து விடுபட...

மண்டலம் - ஜீரண மண்டலம்
காய் - வெண் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - சித்திரை
குணம் - தைரியம்
ராசி / லக்கினம்  -  மேஷம்

சத்துக்கள் :  வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு : வெண்பூசணிக்காய் தோல் மற்றும் விதையுடன் (100 கிராம்), அரசாணிக்காய் விதை (10 கிராம்) வெற்றிலை (10), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை (சிறிதளவு), தக்காளி (1சிறியது) எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் அல்லது மோர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் துர்நாற்றத்துடன் வெளியேறும் சளியிலிருந்து விடுபடமுடியும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com