இந்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆபத்து நமக்குத் தான்! எப்படித் தெரியுமா?

எது மீந்தாலும் அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரு சில உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்கிற உண்மை தெரிவதில்லை.
இந்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆபத்து நமக்குத் தான்! எப்படித் தெரியுமா?

“இந்த ஃபிரிட்ஜ் வந்தாலும் வந்துது ஒரு வாரத்துக்குத் தேவையான மாவ அரச்சி உள்ள வெச்சு தினமோ இட்லி, தோசையே போட்ராங்கனு” பலர் புலம்ப கேட்டு இருப்போம். இன்று வீட்டில் இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவே மாறிவிட்டது இந்த குளிர் சாதனப் பெட்டி. எது மீந்தாலும் அதை எடுத்து ஃபிரிட்ஜில் வைத்து விடலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் நம்மில் பலருக்கு ஒரு சில உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது என்கிற உண்மை தெரிவதில்லை.

ஏன் இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது? கெட்டுப் போகாமல் பாதுகாக்கத் தானே ஃபிரிட்ஜ்? என்று கேள்வி கேட்கிறீர்கள் என்றால் உங்கள் கேள்விக்கான பதில்களை இன்று தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

தக்காளி:

தக்காளி விலை குறைவாக இருக்கும் போதே வாங்கி விட வேண்டும், பின்னர் கிடு கிடுவென விலையேறி விடுகிறது என்று யோசித்து கிலோ கணக்கில் வாங்கி ஃபிர்ட்ஜில் வைக்கிறோம். அது மிகவும் தவறு. தக்காளியை ஃபிரிட்ஜில் வைத்து பதப்படுத்தவேக் கூடாது, ஏனென்றால் அது தக்காளியில் உள்ள சத்துக்களை ஆவி ஆக்கி அதன் சுவையையும், மணத்தையும் குறைத்து விடுகிறது.

பூண்டு:

பூண்டில் சிறிது ஈரப்பதம் நிலைத்தாலே அது முளைவிட துவங்கி விடும். அது மட்டுமின்றி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் பூண்டு அதன் சுவையை இழந்து இருக்கும், மேலும் பிரிட்ஜில் இருக்கும் அனைத்துப் பொருட்களிலும் பூண்டு வாசனை வீசும்.

ஜாம்:

கெட்சப்பை போல் இல்லாமல் ஜாமை ஃபிரிட்ஜில் வைப்பது அதனுள் கிருமி வளர வழி செய்யும். ஏற்கனவே நீண்ட நாட்களுக்குக் கெட்டு போகாமல் இருக்கப் பதப்படுத்த தேவையான பல பொருட்கள் ஜாமில் சேர்க்கப் பட்டுள்ளதே இதற்குக் காரணம். குறிப்பாக இறுக்கமாக மூடப்பட்டிருக்கும் அந்த ஜாம் பாட்டிலினுள் இருக்கும் சிறிது வெப்ப காற்று பாக்டீரியா பொன்ற கிருமிகள் வளர்வதற்கான தகுந்த சூழலை ஏற்படுத்தித் தரும்.

ரொட்டி:

நம்மில் பலர் பிரெட்/ரொட்டி போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைப்பதால் அது நீண்ட நாட்களுக்குச் சாப்பிட குடிய நிலையில் இருக்கும் என்று நினைக்கிறோம், அது மிகவும் தவறு. ஃபிரிட்ஜினுள் இருக்கும் குளிர்ந்த நிலை பிரெட்டில் இருக்கும் ஈரப்பதத்தை உலரச் செய்து அதைச் சீக்கிரமே கெட்டுப் போக செய்து விடும். அதே சமயம் ஃபிரீஸர் (Freezer) உள் பிரெட்டை ஒரு மாதம் வரை வைக்கலாம், பிரெட்டை உறையச் செய்து அதனுள் புஞ்சை போன்றவை வளராமல் தடுப்பதோடு உறைந்த ஐஸ் கட்டிகள் உருகியதும் கெட்டு போகாமல் நல்ல நிலையில் இருக்கும்.

உருளைக் கிழங்கு: 

உருளைக் கிழங்கை குளிர்ச்சியான இடத்தில் தான் வைக்க வேண்டும் என்றாலும் அதே சமயம் அந்த  இடம் ஈரத்தன்மை இல்லாமல் இருக்க வேண்டும். ஃபிரிட்ஜில் உருளைக் கிழங்கை வைப்பதால் அது அதன் சர்க்கரை அளவை அதிகரித்து புற்று நோய் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.

காபித் தூள்:

காபித் தூள் ஒரு டியோடரண்டை போல் செயல் பட்டு ஃபிரிட்ஜில் இருக்கும் அனைத்து நாற்றங்களை உறிந்து விடும். ஆகையால் ஃபிரிட்ஜில் துர்நாற்றம் வீசினால் அதைச் சரி செய்யக் காபி தூளை உள்ளே வைக்கலாம் ஆனால் பயன்படுத்த போகும் காபி தூளை ஃபிரிட்ஜில் வைப்பது தவறு.

வெங்காயம்:

உருளைக் கிழங்கு, பூண்டைப் போல் ஃபிரிட்ஜின் உள் இருக்கும் ஈரப்பதம் வெங்காயத்தில் உள்ள ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றி அதை மென்மையாக மாற்றி முளைவிடவும் செய்துவிடும். மேலும் ஃபிரிட்ஜை துறந்தாலே வெங்காய நாற்றம் வீசச் செய்யும்.

தேன்:

தேனை ஃபிரிட்ஜில் வைத்தால் அது இறுகிப் போக நேரிடும், இதனால் அது பார்ப்பதற்கு பளிங்குக் கல்லை போல் ஆகிவிடும்.

ஆப்பிள்:

ஃபிரிட்ஜில் வைப்பதால் ஆப்பிளின் சத்துகளை இழக்கச் செய்யும். மேலும் அதன் தோல் வறண்டு மெல்வதற்குக் கடினமாக அதை மாற்றி விடும்.

அடுத்த முறை ஃபிரிட்ஜை திறந்து எந்தப் பொருளையாவது உள்ளே வைப்பதற்கு முன் சற்று யோசியுங்கள், இதை உள்ளே வைக்கலாமா என்று. அதுவே உங்களது ஆரோக்கியத்திற்கு நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com