இந்தியாவில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரிப்பு கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இதய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதய நோய் பாதிப்புகளால் ஏற்படும் மரணங்கள் அமெரிக்காவில் குறைந்தும், இந்தியாவில் அதிகரித்தும் வருவதாக அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் ஒருபுறம் இருக்கட்டும், நம் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும் சீராக இருக்க, நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான். அது நம்பிக்கை, நம் மீதான நமக்கு இருக்க வேண்டிய அசைக்க முடியாத நம்பிக்கை. கருவிகள் ஒருபோதும் நம்மை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது. அதன் மீதான கவனத்தை நாம் உடனடியாக நிறுத்திவிட்டு உடல் பயிற்சியை இயல்பாக செய்யலாம்.