MSD எனப்படும் Musculo Skeletal Disorder சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்களை ஆயுர்வேதம் எடுத்துக் கூறியுள்ளதா? சிகிச்சை முறைகள் எவை?
-தேசிகன், சென்னை.
குணம் மற்றும் செயல்கள் வாயிலாகத்தான் நாம் நம் உடலை நன்கு பேணிக்காக்கவும் முடியும். அழித்துக் கொள்ளவும் முடியும். இந்த இரு விஷயங்களும் உணவு, செயல் மற்றும் மருந்துகள் மூலமாக, உடலில் ஏற்படும் குணங்களின் ஏற்ற இறக்கத்தைச் சமன் செய்து ஆரோக்கியத்தை நிலை நிறுத்த முயற்சிப்பதே, நோயாளிகளுக்கு மருந்துவர் செய்ய வேண்டிய கடமையாகும். ஒரு சில குணங்களின் ஆதிக்க வரவினால், நீங்கள் குறிப்பிடும் MSD எனப்படும் தசை மற்றும் எலும்புகளை குறி வைத்துத் தாக்கும் நோய்கள் மனிதர்களைப் பெரிதும் பாதிக்கும். அந்த குணங்களுக்கு எதிரிடையான உணவு - செயல் மருந்துகள் ஆகியவைகளைத் தரும் போது, அந்த உபாதைகள் அனைத்தும் குணமாகி விடுகின்றன. அவை பற்றிய ஒரு சிறிய விவரம்:
காரணம்
1) வறட்சி - எலும்புகளிலுள்ளே அமைந்துள்ள மஜ்ஜை, நீர்ப் பசையான வில்லைகள், முதுகுத் தண்டுவடம் பகுதியில் வறண்டு விடுதல்.
பிரச்னை - தண்டுவட வலி, எலும்புகள் வலுவிழத்தல், தசைநார்கள் சுருங்குதல்
தவிர்க்கவும்: சுவை - கசப்பு, துவர்ப்பு, காரம்
செயல் - அடிதடி, உடற்பயிற்சி, உடலுறவு, நீச்சல்
மருந்துகள் - நீர்ப்பசை, கொழுப்பு மருந்துகள்
2) லேசானது- எலும்பு, தசை, தசைநார்கள் அடர்த்தியை தளர்த்தி வலுவிழக்கச்
செய்தல்
பிரச்னை - நடக்கும் போது தன்னிச்சையாக கால் மூட்டுகள் மடங்குதல்; சோம்பல் முறிக்கும் போது தசைகள் விரைத்துக் கொள்ளுதல்
தவிர்க்கவும்: சுவை - அதிகக் காரம், துவர்ப்பு, எளிதில் செரிக்கும் உணவு
செயல் - பட்டினி, சைக்கிள் சவாரி, பளுதூக்குதல், ஓடுதல்
மருந்து- சர்க்கரை உபாதைக்கான மருந்து, இருமல் மருந்து
3) குளிர்ச்சி-விரைப்பை ஏற்படுத்தும்
பிரச்னை- தசைகள், பூட்டுகள் இறுகி விரைத்து உறுப்புகளை அசைக்க முடியாமல் போதல்
தவிர்க்கவும்-சுவை - கசப்புச் சுவை, குளிர்ந்த நீர், கரும்புச் சாறு, பருப்புகள்
செயல் குளிர்ந்தநீரில் குளித்தல், நீந்துதல், குடித்தல்
மருந்து-உடல்சூட்டைக் குறைக்கும் சந்தனம், வெட்டிவேர் போன்றவை
4)சுரண்டி காயச் செய்தல்- உட்புற நெய்ப்பைச் சுரண்டி தசை, எலும்புகள் காய்ந்து போகுதல்
பிரச்னை - நடக்கும்போது பூட்டுகளிலிருந்து சத்தம் வருதல், வலி ஏற்படுதல்
தவிர்க்கவும்- சுவை- கசப்பு, துவர்ப்பு, சிறிதும் எண்ணெய்ப்பசை இல்லாத வறண்ட உணவு
செயல்- வறண்ட காற்றுக்கு எதிராகப் பயணித்தல், நெய்ப்பின்றி வாழ்தல்
மருந்து- இளைக்கச் செய்யும் மருந்துகள்
5)நகருதல்-தசை, எலும்பு மஜ்ஜை தம் இடத்தை விட்டு விலகுதல்
தவிர்க்கவும்- சுவை-கசப்பு, துவர்ப்பு,கொடிக்காய்கள்
மருந்து- நரம்பு ஊக்கிகள்
சிகிச்சை
1) நெய்ப்பு- எண்ணெய்ப்பசை, நீர்ப்பசை உருவாக்குதல்
அறிவுரை:
சுவை இனிப்பு, புளிப்பு, உப்பு சேர்க்கவும்
செயல் - ஓய்வு, எண்ணெய் கட்டுதல்
மருந்து - க்ஷீரபலா கேப்ஸ்யூல், விதாரியாதி நெய்மருந்து, மகாமாஷ தைலம், எனிமா மற்றும் வெளிப்புறம் தடவுதல்
2) கனமானது - அடர்த்தியை மறுபடியும் ஏற்படுத்துதல்
அறிவுரை
சுவை - இனிப்பு, புளிப்பு, உப்பு, நெய், மாமிச சூப்பு, மஜ்ஜை சேர்க்கவும்
செயல் பகல் தூக்கம், படுக்கையில் ஓய்வு
மருந்து அஜஅஸ்வகந்தாதி லேகியம், பிருகச்சாகலாதி கிருதம் (நெய்)
3) சூடு-வியர்வையை வரவழைத்தல்
அறிவுரை:
சுவை - காரம், புளி, உப்பு சேர்க்கவும்
செயல்- உடலை கனமான போர்வையால் போர்த்துதல், வெந்நீர் ஒத்தடம்
மருந்து-யோகராஜ குக்குலு, கைசோர குக்குலு மாத்திரை,அஷ்டவர்க்கம் கஷாயம்
4 )வழுவழுப்பு - நெய்ப்பை ஏற்படுத்துதல்
அறிவுரை:
சுவை-இனிப்பு, புளிப்பு, நெய், பால் வெண்ணெய் மாமிசசூப்பு சேர்க்கவும்
செயல்-குஷன்படுக்கை, நெய்தடவி வெயிலில் சிறிது நேரம் அமருதல்
மருந்து-கந்த் தைலம், தான்வந்திரம் 101
5)நிலைத்தல்-ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல்
சுவை-இனிப்பு,பால்,நெய்,வெண்ணெய்,பழஜாம், பழங்கள் சேர்க்கவும்
மருந்து-அஷ்வகந்தாசூரணம், சியவனப்பிராசம் லேகியம்
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771