இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளதா?

அவர்  ஒரு கல்லூரி விரிவுரையாளர். மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும்
இப்படிப்பட்ட பிரச்னைகளுக்கும் தீர்வு உள்ளதா?

இருண்ட வீட்டில் ஒளி!

அவர்  ஒரு கல்லூரி விரிவுரையாளர். மணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தையில்லை என்று உறவினர்கள் விசாரிக்கத் துவங்கி விட்டனர். உண்மை நிலை இவருக்கு மட்டும் தான் தெரியும். மணமான நாள் முதல் மனைவிக்கு தாம்பத்தியத்தில் வெறுப்பு. இனிய சங்கீதமாய் இழையோட வேண்டிய இல்லறம்… சூறாவளியாய் சுழன்றடித்தது. நண்பர்களோ, உறவினர்களோ, அக்கம்பக்கத்தினரோ எவருடனும் இணக்கமில்லை. யாருடனும் பேச, பழகப் பிடிக்காத மனைவியின் மனநிலையை அவரால் மாற்ற இயலவில்லை. மனநல மருத்துவரிடம் அழைத்தால் வர மறுக்கிறாள்.

இந்நிலையில் அவர் எங்கள் மருத்துவமனையில் ஆலோசனை பெற வந்தார். வருத்தங்களைக் கொட்டித் தீர்த்தார். ‘இவளுடன் எப்படி நான் காலந்தள்ளுவது?’ என்று மனம் உடைந்து கேள்வி எழுப்பினார். அவரிடம் ஹோமியோபதி மருத்துவத்தின் ஆற்றல் பற்றி விவரித்தேன். சற்றே பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டேன். SEPIA என்ற மருந்தினை உயர்வீரியத்தில் கொடுத்தேன். ‘இதைச் சாப்பிட மறுப்பாளே?” என்றார். மனைவிக்குத் தெரியாமல் எப்படி மாத்திரையைக் கொடுக்கலாம் என்று எளிய வழிமுறையைச் சொன்ன பின் சமாதானம் அடைந்தார்.

30 நாட்கள் கடந்தன. அவர் சற்றே புன்னகை பூத்த முகத்துடன் வந்தார். மனைவியின் நடவடிக்கைகளில் தெரியும் நேர்மையான மாற்றங்களைப் பட்டியல் இட்டார். அன்பான வார்த்தைகளையும் உபசரிப்பையும் சில நாட்களாகப் பார்க்கும் போது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகக் கூறினார். சிகிச்சை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இனிய தென்றல் தவழத் துவங்கியதை அடுத்தடுத்த வருகையின் போது மனநிறைவோடு தெரிவித்தார். சிகிச்சை 5ஆவது மாதத்தைக் கடந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் இனிப்புகள் பழங்களுடன் வந்து… மனைவி கருத்தரித்திருப்பதாய் உற்சாகமாய் கூறி… அன்பளிப்பையும் மனம் நிறைந்த நன்றியையும் வழங்கிவிட்டுச் சென்றார்

Aversion towards beloved ones… என்ற மனக் குறி அடிப்படையில் செபியா தேர்வு செய்யப்பட்டது. தான் ஈன்ற கன்றையே நெருங்க விடாமல் முட்டித் தள்ளி பாலருந்த அனுமதிக்காமல் தடுத்த பசுவிற்கு செபியா அளித்து தாய்மையை மீட்டு தந்த அனுபவம் ஹோமியோபதிக்கு உண்டு. (மருந்து தேர்வு செய்வதும், வீரியம் மற்றும் உட்கொள்ளும் அளவு, தொடர் மருந்துகள் போன்றவற்றை முடிவு செய்யவும் அனுபவமிக்க ஹோமியோபதி மருத்துவரின் ஆலோசனை அவசியம்).

இரு நாள் ஊமை வாழ்க்கை

சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் பணிபுரியும் சுமார் 35 வயது ஆண். ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர். சாத்தூருக்கும் சிவகாசிக்கும் இடையில் உள்ள கீழஒட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த தாழ்த்தப்பட்டவர்களின் கிராமத்தில் பலருடன் இரண்டறக் கலந்து பழகியிருக்கிறேன். அந்த மக்களின் அன்பும் உபசரிக்கும் பண்புகளும் மறக்க முடியாதவை.

எனது மருத்துவமனை புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட ஆரம்ப நாட்களில் 5 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் நாள் மாலை 3 மணியளவில் அவர் மனைவியுடன் வந்தார். நான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டதாகவும், மாலை 5 மணிக்கு வருமாறும் பணிப்பெண்கள் கூறியுள்ளனர். அவர் கண்ணீருடன் கும்பிட்டு வேண்டியிருக்கிறார்; அவரின் மனைவியும் டாக்டருக்கு இவரை நல்லாத் தெரியும்: இவரு பேரைச் சொல்லுங்க. என்று சொல்லியிருக்கிறார். பணிப்பெண்கள் விவரத்தைக் கூறியதும்… அவரைக் காண வந்தேன்.

என்னைக் கண்டதும் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாய் பெருகி வழிந்தது. ஊமை போல சைகையில் ஏதோ சொல்ல முயன்றார்… சிறுகுரல் கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவரது மனைவிடம் விசாரித்தேன். ‘மதியம் ஒன்றரை மணிக்கு வழக்கம் போல சாப்பிட வந்தார். ரொம்பப் பசிக்குது என்றார். அவரை உட்காரச் சொல்லி விட்டு தட்டில் சோறு எடுத்துக் கொண்டு வந்து பார்த்தால்…. அவரால் பேச முடியவில்லை.. தொண்டையை பிடித்துக் கொண்டு தரையில் உருண்டு புரண்டு அழுதார். சத்தமும் வரவில்லை. நானும் பயந்து விட்டேன்’ என்றார்.

பீதியில் இருந்த நோயாளிக்கு முதலில் ACONITE அளித்தேன். அவரது துயரம் தணியவில்லை. தனக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவும் முடியவில்லை அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை… குழந்தையாய் கேவிக் கேவி அழுதார். அடுத்து…CAUSTICUM உயர்வீரியத்தில் ஒரு வேளை கொடுத்து விட்டு, ‘BRAIN- CT’ ஆய்வு செய்து வருமாறு அனுப்பினேன். இரண்டாம் நாள் மதியம் வந்தார். CTஆய்வு அறிக்கை BULPAR PALSY’ என்று சுட்டிக் காட்டியது.ARNICA-10M’ மருந்தினை நீரில் கலந்து (உறங்கும் நேரம் தவிர) ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 10 மி.லி வீதம் தொடர்ந்து அருந்துமாறு அறிவுறுத்தி அனுப்பினேன்.

மூன்றாம் நாள் காலை அவரும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுமாய் சுமார் இருபது பேர்கள் வந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. இன்று காலை எழுந்ததும் அவர் வழக்கம் போல பேசினார். நன்றாகப் பேசினார்… என்று அவரது மனைவி நன்றி பெருக்கோடு கூற… அவர்  மீண்டும் கண்களில் நீர் வழிய கும்பிட்ட படி’ சார்! என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சுன்னு நெனச்சேன். கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க…ரொம்ப நன்றி’ என்று நா தழுதழுக்கக் கூறினார். சுவரில் மாட்டிருந்த ஹோமியோபதியின் தந்தை மாமேதை டாக்டர் ஹானிமனைக் காட்டி.. ‘நாம் எல்லோரும் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

இந்தச் சிகிச்சைக்குப் பின் அவரை எப்போதாவது தற்செயலாகக் காண நேர்ந்தால்…  இருவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. அந்த கிராமத்தைச் சேர்ந்த பலரும் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.

6 மாத அவஸ்தையும் 6 நாளில் நிவாரணமும்!

26 வயது பெண் நோயாளி ஆறு மாதகாலமாக தொடர்ந்து டைபாய்டு சுரத்தின் பிடியிலும் அதற்கான தொடர்ச்சியாக அலோபதி மருத்துவத்தின் பிடியிலும் சிக்கிய நிலையில் அவரது கணவர் ஹோமியோபதி சிகிச்சைக்கு எங்களிடம் அழைத்து வந்தார்.

எலும்பும் தோலுமாய் தோற்றம்... ஓரளவு திரவ உணவு மட்டுமே சாப்பிட முடிந்தது… எது சாப்பிட்டாலும் வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு… மோசமான பலவீனம்… பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கள் சொருகின… தலை முதல் கால் வரை வலிகள்..இடுப்பிலும், கால்களிலும் கைகளிலும் அடித்துப் போட்டது போல் வலிகள்… காலையில் குளி்ர்… மாலையில் தினமும் கடும் சுரம்… மனக் குழப்பம்… தலைசுற்றல்…. ஆங்கிலச் சிகிச்சைகளுக்கான அனைத்து அறிக்கைகளையும் காட்டினார்கள். நோயைக் கண்டறிய அதிநவீனக் கருவிகளையும் அறிவியல் ஆய்வு முறைகளையும் பயன்படுத்தும் அலோபதி மருத்துவம்… நோயின் பெயருக்கு சிகிச்சை அளிப்பதால் தோல்விகள் தவிர்க்க முடியாதவையே.

ஹோமியோபதியில் ஆர்ஸ், பாப்டீஸியா, டைபாய்டினம் ஆகிய மூன்று மருந்துகள் குறைவான டோஸ்கள் மட்டுமே அளிக்கப்பட்டன. முதல் மூன்று நாளில் நல்ல முன்னேற்றம். வாந்தி கட்டுக்குள் வந்தது. பசி சற்றே கூடியது. சோர்வு குறையத் துவங்கியது. ஆறு நாட்களில் சுரம் முற்றிலும் விலகியது. இருப்பினும் மேலும் சிலநாட்கள் சில வேளை மருந்துகள் வழங்கினோம். 10 நாட்களுக்கு பிறகு இயல்பான நிலைக்குத் திரும்பினார். மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின் முதன் முறையாக WIDAL TEST- NEGATIVE என்பதை உறுதி செய்தது.

கிழிந்த உதடுகள்

சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருவிலிருந்து மூன்றரை வயதுச் சிறுவனை அவனது தாய் பதற்றத்துடன் தூக்கி வந்தார். ஓடி விளையாடும் போது படிக்கட்டில் முகம் பதிய விழுந்திருக்கிறான். உதடுகளில் அடிப்பட்டு கிழிந்துவிட்டன. வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை கைக்குட்டையால் தாய் துடைத்துக் கொண்டிருந்தாள்.

உடனடியாக ARNICAவும் RESCUE REMEDYயும் கொடுத்தோம். அழுது கொண்டே இனிப்பு மாத்திரைகளை சுவைத்து விழுங்கினான். அவனுக்குத் தொடர் மருந்தாக Calendula 30c தினசரி மூன்று வேளையும் பின்னர் Calendula 200 c வீரியத்தில் தினம் ஒரு வேளை வீதம் இரண்டு நாட்களுக்கு கொடுத்து அனுப்பினோம். ஆங்கில மருத்துவ உதவி இல்லாமல் கிழிந்த உதடுகளில் தையல் போடாமல் முழுமையாகக் குணமடைந்திருந்தான். பையனின் அப்பாவும் ஹோமியோபதி மருத்துவத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர் என்பதால் நன்கு ஒத்துழைத்தனர். இது போன்ற காயங்களில் காலண்டுலா-வின் ஆற்றல் வியக்கத்தக்கது.

ஊனம் ஆக்குவதற்குப் பெயர் தான் சிகிச்சையா?

25 வயது பெண். மணமாகி 4 வருடங்கள் கடந்தும் குழந்தையில்லை. ஸ்கேன் ஆய்வில் வலது சினைப் பையில்(RIGHT OVERY) 2 நீர்மக் கட்டிகளும்(CYSTS), இடது சினைப் பையில் (LEFT OVARY) ஒரு பெரிய நீர்மக் கட்டியும்(LARGE CYST) இருப்பதை கண்டறிந்து பெண் சிறப்பு மருத்துவர்களிடம் (GYNAENOCOLOGISTS) சிகிச்சை பெற்றார்.

அவருக்கு அடிவயிற்றின் இருபுறமும் வலி; குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய முடியவில்லை. ஒழுங்கற்ற, வேதனைமிக்க மாதப் போக்கு; சுமார் ஒன்றை ஆண்டு ஊசி, மாத்திரை, மருந்துகள் மூலம் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் ஸ்கேன் ஆய்வு செய்து பார்த்தனர். வலது சினைப் பையில் 4 நீர்மக் கட்டிகளும், இடது சினைப் பையில் 3 நீர்க்கட்டிகளும் இருந்தன. கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் கட்டி ஒன்றும் உருவாகியிருந்தது.

வலியின் அளவும் அதிகரித்திருந்தது. கர்ப்பப்பையும் வீங்கியிருந்தது. மாதப் போக்கோ பெரும் துயரமாய் மாறியது. குழந்தை பெறும் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு,அறுவைச்சிகிச்சை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று பெண்மைப் பிணியியல் நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

மனமுடைந்த நிலையில் ஹோமியோபதி மருத்துவம் செய்து கொள்ள வந்த அப்பெண்ணின் துயர்குறிகளை ஆய்வு செய்து மருந்துகள் அளிக்கப்பட்டன. 10 நாட்களில் வலிகள் நன்கு குறைய துவங்கின. உடலில் புத்துணர்ச்சியும் உள்ளத்தில் நம்பிக்கையும் ஏற்பட்டது. மிகுந்த ஆர்வத்தோடும், பொறுமையோடும் ஹோமியோபதி சிகிச்சைக்கு அப்பெண்மணி ஒத்துழைத்தார்.

ஒரு மாத காலத்தில் மாதாந்திரப் போக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மூன்றரை மாதங்களுக்குப் பின் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், சினைப் பைகளை முற்றிகையிட்டிருந்த நீர்மக் கட்டிகள் மற்றும் கர்ப்பப்பையின் ஃபைப்ராய்டு கட்டி அனைத்தும் மறைந்து போயிருந்தன. தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பபையும் சினைப்பைகளும் இயல்பான ஆரோக்கிய நிலைக்கு வந்து விட்டன. அடுத்த மூன்று மாதங்களில் அப்பெண் தாய்மையடைந்தார்.

உள்ளே அமைந்த உறுப்பானாலும், வெளியே அமைந்த உறுப்பானாலும் உடலின் எந்த உறுப்பை அகற்றினாலும் ஊனம் என்பதுதானே பொருள். கர்ப்பப்பை அகற்றப்படுகிறது என்றால் அதுவும் ஊனம் தானே?

மலட்டுத்தன்மை அல்லது குழந்தையின்மை என்பதையும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் ஊனம் எனலாம். இந்த இரண்டு ஊனங்களும் ஏற்படாமல் அப்பெண்ணைப் பாதுகாத்தது ஹோமியோபதி மருத்துவம். இது போன்ற அரிய சிகிச்சைகளை ஆரவாரமின்றி எளிமையாகச் செய்து காட்டி வருகிறது. விபத்துக் காலங்கள் தவிர பெரும்பாலான  வியாதிகளில் அறுவைச் சிகிச்சைகள் அவசியமில்லை என்று சொல்கிறது ஹோமியோபதி.

Dr.S.வெங்கடாசலம்

மாற்றுமருத்துவ நிபுணர்

சாத்தூர்

Cell : 9443145700

Mail : alltemed@g,mail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com