திருநீற்றுப் பச்சிலை , கற்பூரம் , கஸ்தூரி மஞ்சள் , ஒமம் இவை அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலை வலி , தலை பாரம் , காய்ச்சல் போன்றவை குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையின் வேரை (அரை கிராம்) அளவுக்கு எடுத்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டு வந்தால் நரம்புச் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலைச் சாறு (100 மில்லி) , நல்லெண்ணெய். (1 லிட்டர்) இவை இரண்டையும் கலந்து தைல பதமாகக் காய்ச்சி இறக்கி , தினமும் தலையில் தேய்த்துக் குளித்து , உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையைக் கல் உப்பு சேர்த்துக் கசக்கிப் பிழிந்தால் சாறு வரும். அந்தச் சாற்றை மூக்கில் சில துளிகளைத் தினமும் விட்டுக்கொண்டால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.
திருநீற்றுப் பச்சிலையை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து , அம்மியில் வைத்து நன்றாக அரைத்து சிறு உருண்டையாகச் செய்து வைத்துக்கொண்டு பிரசவ காலத்தில் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
திருநீற்றுப் பச்சிலைச் சாற்றில் சீரகம் , சோம்பு இவை இரண்டையும் சம அளவு
(20 கிராம்) எடுத்து ஊறவைத்து , காயவைத்துப் பொடி செய்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள விஷக் கழிவுகள் அழியும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com