செரிமான சக்தி சீராக இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.
புத்திக் கூர்மையாக , மந்தப் புத்தி மறைய ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது அரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு அதனுடன் தேன் அல்லது சர்க்கரை கலந்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வந்தால் மூளை புத்துணர்ச்சி பெறும். மந்தப் புத்தி மறையும்.
உடல் குளிர்ச்சியடைய பழுத்த காட்டு இலந்தைப் பழங்களை கையால் பிசைந்து, கொட்டையை நீக்கி 250 கிராம் அளவுக்கு இரண்டு லிட்டர் நீர்விட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி, தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து, பாகு பதத்தில் காய்ச்சி மீண்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் இரவு படுக்கும்பொழுது 5 முதல் 10 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தணிந்து, இரத்தஅழுத்தம் சீராகும். சுறுசுறுப்பு உண்டாகும்.
அதிக வியர்வையை கட்டுப்படுத்த இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை மற்றும் உள்ளங் கால்களில் பூசி வந்தால் அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
புழுவெட்டு மறைய இலந்தை இலையை மைபோல் அரைத்து புழுவெட்டு உள்ள பகுதியில் தேய்த்து வந்தால் புழுவெட்டு மறையும்.
இளநரை மறைய இலந்த இலையை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின்பு தலையை அலசி குளித்து வந்தால் இளநரை மாறும்.
கருப்பை சார்ந்த அனைத்து பிரச்சனை தீர இலந்தை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அதனுடன் மிளகு (6) , பூண்டு (4) பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும். இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com