விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப் புண் , வெள்ளைப்படுதல் குணமாகும்.
விளா ஒடு , வில்வ ஒடு, மாதுளை ஒடு , மாம்பருப்பு , மஞ்சள் அனைத்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , தினமும் காலை மாலை என இரு வேளையும் இரண்டு கிராம் பொடியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
விளா ஓடு, அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து , தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் , இரைப்பு, ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
விளா மர இலையை , குளிக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து வந்தால் சொரி , சிரங்கு , வியர்க்குரு போன்றவை நீங்கும்.
விளா மரத்தின் பிசினைஎடுத்து தண்ணீரில் கரைத்து , தெளிந்த பிறகு அந்த தண்ணீரைக் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் தணியும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609