வல்லாரைக் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவுக்கு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
வல்லாரைக் கீரைச் சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து பிறகு உலர்த்திப் பொடியாக்கி , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் அனைத்தும் தீரும்.
வல்லாரைக் கீரை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி ,இரண்டிலும் சம அளவு எடுத்துக் கலந்து, தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
வல்லாரைக் கீரைச் சாற்றில் பூனைக்காலி விதைப் பருப்பை ஊறவைத்துப் பொடியாக்கி, சம அளவு மிளகுத் தூள் சேர்த்து காலை மதியம் என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் காக்காய் வலிப்பு குணமாகும். முடக்கு வாதமும், கை கால் வாதமும் குணமாகும்.
சுக்கு, ஏலக்காய், வல்லாரைக் கீரை மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
அதிகாலையில் வல்லாரைக் கீரையைப் (4) பறித்து, நன்றாக மென்று தின்று அடுத்து நான்கு மணி நேரத்திற்க்கு எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்தால் பலவகையான மனநோய்களும் விலகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609