இன்றைய மருத்துவ சிந்தனை: மகிழ மரம்.

கருப்பை பலவீனம் தீரும்
இன்றைய மருத்துவ சிந்தனை: மகிழ மரம்.

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!! 

மகிழ மரம்:

  • மகிழம் பட்டையை (10கிராம்) எடுத்து  அவற்றை பொடியாக்கி அரை லிட்டர் நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லி வீதம் காலை, மாலை  என இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.
  • மகிழ மரத்தின் பிஞ்சுகளை(2) வாயில் மென்று அவற்றை துப்பிவிட்டு வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.
  • மகிழம் பூவை பறித்து பெண்களின் தளர்ந்த மார்பகங்கள் மீது வைத்துக்கட்டிக் கொண்டு வந்தால் மார்பகங்கள்  இறுகி எடுப்பாகாத் தோன்றும்.
  • மகிழம் பூ , ஜாதிக்காய் இவை இரண்டையும் சம அளவு சேர்த்துச் அரைத்து சாப்பிட்டு வந்தால்  உடலுறவு வேட்கை அதிகம் உண்டாகும்.
  • மகிழம் பூ , மல்லிகப் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ஆண்குறியில் தடவி வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
  • மகிழம் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி அவற்றை வடிகட்டி அந்த தண்ணீருடன் கொஞ்சம் பால் கலந்து குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

குறிப்பு : மகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தானாகவே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com