இன்றைய மருத்துவ சிந்தனை: லவங்கப் பட்டை

இன்றைய மருத்துவ சிந்தனை: லவங்கப் பட்டை

மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

 உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

லவங்கப் பட்டை:

  • லவங்கப் பட்டை ,சுக்கு ,ஏலக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் அளவு மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே தீரும்.
  • லவங்கப் பட்டை ,சிறுகுறிஞ்சான் இரண்டையும் சம அளவு எடுத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • லவங்கப் பட்டையுடன் வேப்பிலை ,மிளகு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து ,அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
  • லவங்கப் பட்டையைப் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
  • லவங்கப் பட்டை ,சுக்கு ,ஓமம் மூன்றையும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும்.இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து காலை ,மாலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான வாயுக் கோளாறுகளும் குணமாகும்.
  • லவங்கப்பட்டை (100கிராம்) மற்றும் மிளகு ,திப்பிலி தலா 10கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும். இதில் தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட்டுவந்தால் நுரையீரல் சார்ந்த கோளாறுகள், சளி, தலைபாரம் போன்றவை குணமாகும்.



KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.co
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com