நாய்த் துளசியை வேருடன் பிடுங்கி, கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்.
துளசி சாற்றில் தேன் கலந்து குடித்துவந்தால் உடல் பருமன் குறையும்.
துளசிச் சாறு, இஞ்சிச் சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து குடித்தால் ஜலதோஷம் நீங்கும்.
நாய்த் துளசியை அரைத்து, சொரி, சிரங்கு, மற்றும் அரிப்புகளில் தடவி வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
கிருஷ்ண துளசிச் சாற்றைக் குடித்தால் தொண்டை நோய், காது வலி, சிறுநீர்த் தாரையில் எரிச்சல், கபம் போன்றவை குணமாகும்.
துளசி விதைகளைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குணமாகும் .
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
நீரிழிவு நோயாளிகள் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
மன அழுத்தம் என்பது தற்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை வாழ ஆசை இருந்தால், துளசி இலையை தினமும் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தைப் குறைக்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609