இன்றைய மருத்துவ சிந்தனை அரச மரம்

அரச இலையை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு உருண்டை
இன்றைய மருத்துவ சிந்தனை அரச மரம்

அரச இலையை நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு உருண்டை அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.

அரச மரக் குச்சியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

அரச மரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

அரச மரத்தில் இருந்து பால் எடுத்து, காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவிவந்தால் விரைவில் மறையும்.

அரச இலையைக் காயவைத்துப் பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.

அரச இலையை எரித்து, தேங்காய் எண்ணெய்யில் குழைத்து உடலில் தடவிவந்தால் தீப்புண் தழும்புகள் மறையும்.

அரச மரத்தின் பழம், வேர், பட்டை ஆகியவற்றைக் காயவைத்துப் பொடி செய்து, பாலைக் காய்ச்சி அதில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பலம் உண்டாகும்

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com