தண்ணீர்விட்டான் கிழங்கு, நெருஞ்சில் இவை இரண்டையும் பாலில் போட்டு வேகவைத்து உலர்த்திப் பொடி செய்து , தினமும் ஐந்து கிராம் பொடியைப் பாலில் கலந்து குடித்துவந்தால் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், குழந்தைப்பேறு உண்டாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைத்துக் காயவைத்துப் பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால் நீரிழிவு குணமாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசிரி இவை அனைத்திலும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து 5 கிராம் வீதம் காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து குடித்துவந்தால் ஆண்மைக்குறைவு , நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் இரண்டு வேளையும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்/ Foot
and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com