கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வறுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை என இருவேளையும் உணவுக்குப் பிறகு ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, வாத நோய்கள் குணமாகும்.
உலர்ந்த கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், உப்பு - தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து தினமும் சூடான சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துவந்தால் நரை முடி மறையும்.
கறிவேப்பிலையை அரைத்து முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் குழைத்து தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் முடி கறுப்பாக வளரும்.
கறிவேப்பிலை, நிலாவரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெரு வயிறு மறையும். மலச்சிக்கல் தீரும்.
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணிக் கீரை இவை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தலைமுடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
கறிவேப்பிலையை (கால் கிலோ) உலர்த்திப் பொடி செய்து அதில் பெருங்காயத் தூள் (25 கிராம்) சேர்த்து, தினமும் உணவுக்குப் பிறகு இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com