கடல் அழிஞ்சில் பட்டை, கருஞ்சீரகம், வில்வ மரப்பட்டை இவை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் பொடியைச் சாப்பிட்டுவந்தால் படர் தாமரை, தேமல், சிரங்கு போன்றவை குணமாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை, அதிமதுரம், வெள்ளரி விதை, பூசணி விதை இவை அனைத்தையும் சம அளவு (100 கிராம்) எடுத்துப் பொடி செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் ஐந்து கிராம் பொடியைச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் அதிக தாகம் குணமாகும்.
கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்தரி இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை தினமும் இருவைளை தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால் சளி, இருமல், தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
கடல் அழிஞ்சில் பட்டை, பருத்தி விதை இவை இரண்டையும் சம அளவு எடுத்து இடித்து 1 லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி தினமூம் இருவேளை குடித்துவந்தால் சர்க்கரை நோய், அதிக சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
கடல் அழிஞ்சில் வேர்ப் பட்டை, சித்திர மூல வேர்ப்பட்டை இவை அனைத்தையும் சம அளவுஎடுத்துப் பொடி செய்து, சூடான பாலில் இரண்டு கிராம் பொடியைக் கலந்து குடித்துவந்தால் வாதநோய்கள் அனைத்தும் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com