கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில் போட்டுச் சுவைத்து வந்தால் தொண்டைப்புண் ஆறும்.
கிராம்பை நீர் சேர்த்து மை போல் அரைத்து நெற்றியிலும், மூக்கிலும் பற்றுப்போட்டால் தலைபாரம், மூக்கு அடைப்பு போன்றவை குணமாகும்.
கிராம்புப் பொடியை (அரை ஸ்பூன்), இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, ஆறிய பிறகு ஒரு மணிக்கு ஒருமுறை 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் நன்றாகப் பசி எடுக்கும். வயிற்றுப் போக்கும் குணமாகும்.
கிராம்பு, மஞ்சள், சாம்பிராணி இவை மூன்றையும் சம அளவு பொடி செய்து, நெருப்பில் போட்டு புகையை முகர்ந்தால் தலைவலி, தலைபாரம் தீரும்.
கிராம்பு (5), சீரகம் (2 ஸ்பூன்) இவை இரண்டையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வநாதால் பித்தத்தால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com