சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து, காயவைத்து பொடி செய்து தினமும் அதிகாலையில் அரை ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும், இளநரை மறையும்.
சீரகம், சோம்பு, வாய்விளங்கம், ரோஜாப்பூ இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும், இதில் காலை மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் குறையும்.
சீரகம், ஒமம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்கவைத்துக் குளித்தால் இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
சீரகம், குருந்தொட்டி வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடிசெய்து, கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் குளிர்க் காய்ச்சல் உடனே குணமாகும்.
சீரகத்தைப் பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்துச் சாப்பிட்டால், உடல் சூட்டால் உண்டாகும் வயிற்று வலி குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com