எலுமிச்சம் பழச்சாறு , வெள்ளரிப் பிஞ்சு , உப்பு மூன்றையும் கலந்து அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
எலுமிச்சம் பழச்சாற்றில் தேயிலைத் தண்ணீரைக் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கருமையாக வளரும்.
தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை தீரும்.
எலுமிச்சம் பழச்சாறு , வல்லாரைக்கீரை இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள வெண்புள்ளிகள் மறையும்.
எலுமிச்சம் பழச்சாற்றை மோரில் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகிவிடும்.எலுமிச்சம் பழச்சாறு ,பேரீச்சம்பழம் , சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தக் கொதிப்பு குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , வெங்காயச்சாறு இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப் போக்குநிற்கும்.
இளநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து உடலில் தேய்த்து வந்தால் தேமல் , வியர்குரு போன்றவை குணமாகும்.
எலுமிச்சம் பழச்சாறு , தேன் இவை இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் இருமல் குணமாகும்.
எலுமிச்சம் பழச் சாற்றை மாதவிலக்குச் சமயங்களில் குடித்து வந்தால் அந்த நேரத்தில் ஏற்படக்கூடிய வயிற்று வலி குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com