அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு சேர்த்து வேகவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை குணமாகும்.
அரைக்கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன், பொடுகுப் பிரச்சனைகள் நீங்கி முடி நன்றாக வளரும்.
அரைக்கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து, அதில் தினமும் ஐந்து சிட்டிகை அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
அரைக்கீரையை சிறு பருப்பு சேர்த்து, தொடரந்து 21 நாள்களுக்குச் சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்த சோகை மறையும்.
அரைக்கீரையுடன் மிளகாய் வற்றல், சிறுபருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து, சாற்றை வடித்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
அரைக்கீரையுடன் சுக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் குளிர் காய்ச்சல், ஜன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.
அரைக் கீரை தண்டுணன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேராத்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்து வந்தால் சளி, இருமல், நுரையீரல் தொடர்பான கப நோய்கள் குணமாகும்.
அரைக் கீரையுடன் பாசிப் பயிறு, மிளகு, நெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609