இன்றைய மருத்துவ சிந்தனை அன்னாசி

அன்னாசிப் பூவை பொடி செய்து, இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால், அஜீரணம்
இன்றைய மருத்துவ சிந்தனை அன்னாசி

அன்னாசிப் பூவை பொடி செய்து, இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டுவந்தால், அஜீரணம், மாந்தம், புளித்த ஏப்பம் போன்றவை குணமாகும்.

அன்னாசிப் பழச் சாற்றை சூடுபடுத்திக் குடித்தால் வாந்தி, வயிற்றுக் கடுப்பு, காமாலை போன்ற உஷ்ண நோய்கள் விலகும்.

அன்னாசிப் பழ இலையை இடித்து சாறு எடுத்து, 15 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் தீராத விக்கல் தீரும். இந்த சாற்றையே கொஞ்சம் அதிகப்படுத்தினால் பேதி உண்டாகி குடல் சுத்தமாகும்.

அன்னாசிப் பூவை அரைத்து தினந்தோறும் வயிற்றில் பூசிவந்தால் பெரு வயிறு கரையும்.

அன்னாசிப் பழத்தைத் தினமும் சாப்பிட்டுவந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.

அன்னாசி இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.

அன்னாசிப் பழ விதையை எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவைத்து  உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com