இன்றைய மருத்துவ சிந்தனை உப்பு

உப்பை வறுத்துப் பொடி செய்து அதில் மூன்று சிட்டிகையை மோரில் கலந்து சாப்பிட்டால்
இன்றைய மருத்துவ சிந்தனை உப்பு

உப்பை வறுத்துப் பொடி செய்து அதில் மூன்று சிட்டிகையை மோரில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.

குமட்டிக்காய் சோற்றில் உப்பைக் கரைத்து, தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து வந்தால், அந்த இடத்தில் முடி வளரும்.

உப்புடன் கொய்யா இலையை சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கி வந்தால், பல் வலி, ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.

உப்பு, பூண்டு, பெருங்காயம், இந்துப்பு இவை நான்கையும் சம அளவு எடுத்து சேர்த்து அரைத்து, அதனுடன் பனை வெல்லத்தைச் சேர்த்து இடித்துக்கொள்ளவும். இதில் சுண்டக்காய் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனடியாக தீரும்.

கொத்தமல்லி இலைச்சாறுடன் சிறிது உப்பைக் கலந்து சாப்பிட்டால் வாந்தி ஏற்பட்டு, கெட்டுப்போன உணவால் உண்டான நஞ்சு வெளியேறும்.

குப்பைமேனி இலைச் சாறு எடுத்து, அதில் சிறிது உப்பைக் கலந்து குடித்தால், வாந்தி ஏற்பட்டு நெஞ்சில் உள்ள சளி இளகி வெளியேறும்.

பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும்.

தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com