வேப்பமர பட்டை, சீரகம் (2 ஸ்பூன்) இவை இரண்டையும் பொடி செய்து பசும் பாலில் கலந்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
வேப்ப மரத்தில் இருந்து கொழுந்து இலைகளைப் பறித்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பிறகு பால், தயிர், நெய், வேர்கடலை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் உடலில் சதை பிடிக்கும்.
வேப்பம்பூவை, நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
வேப்பம் பூவை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி, தலைக்குத் தடவி வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
வேப்பிலை, துளசி இவை இரண்டையும் சேர்த்துக் கொதிக்கவைத்து தலைக்குக் குளித்து வந்தால் பேன், பொடுகுத் தொல்லை தீரும்.
வேப்பம் பூ (50 கிராம்), வெல்லம் (15 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி, அதை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பொடுகுப் பிரச்சனையே இருக்காது.
வேப்பிலையுடன் ஒமத்தை அரைத்து நெற்றி, கழுத்தில் பூசிக்கொண்டால் மூக்கில் நீர் வடிவது நிற்கும்.
வேப்பிலையை அரைத்துச் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609