இன்றைய மருத்துவ சிந்தனை: பிரமந்தண்டு

குடலில் உள்ளபுழு மற்றும் கீரிப்பூச்சிகள்  போன்றவை குணமாகும்.
இன்றைய மருத்துவ சிந்தனை: பிரமந்தண்டு


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


பிரமந்தண்டு:

  • மலக்குடல் புழு , கீரிப்பூச்சி நீங்க பிரமந்தண்டு வேரை அரைத்து (5 கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் (50 மி.லி) , கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் மலக் குடலில் உள்ளபுழு மற்றும் கீரிப்பூச்சிகள்  போன்றவை குணமாகும்.
  • கண்பார்வை மங்கல் , எரிச்சல் நீங்க பிரமந்தண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் 40 நாளில் கண்பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும்
  • பல் ஆட்டம் , சொத்தை நீங்க பிரமந்தண்டு செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
  • ஆஸ்துமா , இரைப்பு , இருமல் நீங்க பிரம்ந்தண்டு இலையை காயவைத்து எரித்து அந்த சாம்பல் பொடியை (2கிராம்) அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்.
  • உள்ளங்கால் , கை புண்கள் ஆற பிரமந்தண்டு இலையை அரைத்து உள்ளங்கால் , கை , பாதங்களில் வரும் புண்கள் , சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் அவை விரவில் குணமடையும்.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com