மலக்குடல் புழு , கீரிப்பூச்சி நீங்க பிரமந்தண்டு வேரை அரைத்து (5 கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் (50 மி.லி) , கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால் மலக் குடலில் உள்ளபுழு மற்றும் கீரிப்பூச்சிகள் போன்றவை குணமாகும்.
கண்பார்வை மங்கல் , எரிச்சல் நீங்க பிரமந்தண்டு பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் 40 நாளில் கண்பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும்
பல் ஆட்டம் , சொத்தை நீங்க பிரமந்தண்டு செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்கி வந்தால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.
ஆஸ்துமா , இரைப்பு , இருமல் நீங்க பிரம்ந்தண்டு இலையை காயவைத்து எரித்து அந்த சாம்பல் பொடியை (2கிராம்) அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் காலை மாலை என இருவேளையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும்.
உள்ளங்கால் , கை புண்கள் ஆற பிரமந்தண்டு இலையை அரைத்து உள்ளங்கால் , கை , பாதங்களில் வரும் புண்கள் , சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை போன்றவற்றின் மீது பூசி வந்தால் அவை விரவில் குணமடையும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com