மாதவிலக்கு கோளாறுகள் நீங்க இம்பூறல் வேர்ப் பட்டையுடனச் (10 கிராம்) , பெருங்காயம் (1 கிராம்) ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் சூதக வலி , மாத விலக்குக் கோளாறுகள் போன்றவை தீரும்.
ஆஸ்துமா , காசநோய் , இருமல் நீங்க இம்பூறல் இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இவை இரண்டையும் இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக சுண்ட வைத்துத் தினமும் மூன்றுவேளை பருகி வந்தால் ஆஸ்துமா , காசநோய், ஈளை, இருமல் போன்றவை குணமாகும்.
சளி , இருமல் , இரைப்பு நீங்க இம்பூறல் வேர் , சுக்கு , அதிமதுரம் தலா 10 கிராம் எடுத்து தட்டி தண்ணீரில் (ஒரு லிட்டர்) போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி , நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சளி , இருமல் , இரைப்பு போன்றவை தீரும்.
கை , கால் எரிச்சல் குணமாக இம்பூறல் இலையைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து கை , கால் கழுவி வந்தால் எரிச்சல் குணமாகும்.
வாந்தி , இருமல் , காசநோய் குணமாக்கும் லேகியம் இம்பூறல் வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும். இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com