நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.
நெல்லிக்காய் பொடி , கடுக்காய் பொடி இரண்டையும் 2 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி , மூக்கடைப்பு போன்றவை குணமாகும்.
நெல்லிக்காய் , முருங்கைக்காய் , முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கர்ப்பிணிகளுக்குக் கை கால் வீக்கங்கள் வராமல் தடுக்கலாம்.
நெல்லிக்காய் சாற்றில் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
நெல்லிக் கனிகளைப் பறித்து தண்ணீரில் போட்டு ஊறவைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
நெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி , தேன் மூன்றையும் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக் கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com