கோரைக் கிழங்கை காயவைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் அரை தேக்கரண்டி வீதம் காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் மூட்டு வலி , தசை வலி போன்றவை குணமாகும்.
கோரைக் கிழங்கு சூரணத்தை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை மாலை என இருவேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் புத்தி கூர்மை அதிகமாகும்.
பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் நன்றாகக் கழுவி அவற்றை அரைத்து மார்பகத்தில் பூசிவந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
கோரைக்கிழங்கை காய்ச்சாத பசும் பால் விட்டு நன்றாக அரைத்து உடலில் பூசிச் சிறிதுநேரம் கழித்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் குணமாகும்.
கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் மாலையும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு மற்றும் வயிற்றுப்போக்கும் நீங்கும்.
ஒரு கோரைக்கிழங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோலை நீக்கி இரண்டையும் சேர்த்து நன்கு இடித்துப் பின் சிறிது தேன் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் இதனை சுண்டைக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல் கிருமிகள் அனைத்தும் முற்றிலுமாக அகன்றுவிடும். இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் சுடு சோற்றில் எலுமிச்சம் பழம் சாறும் கொஞ்சம் நெய்விட்டும் சாப்பிடவேண்டும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com